திரைப்படம்: திருநீலகண்டர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும்
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும்
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே
மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே மௌன குருவே மௌன குருவே
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
ஆதியந்தம் இல்லா ஹரனே ஆ... ஏ..ஆ.. ஆஆ..
ஆதியந்தம் இல்லா ஹரனே அன்பர் உள்ளம் வாழும் பரனே
ஆதியந்தம் இல்லா ஹரனே அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே
பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
--------------
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
வெறுநாளாக்கி வெறுநாளாக்கி நம் வாழ்நாளை
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆஆ
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் இதைக்
கண்டு நெஞ்சில் - இதைக்
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் - தனில்
கொண்டமிழ்த்தி விடுமே
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - முனிவர்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே
தோணியாகி வருமே அதனால்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற ஒரு நாள்
-------------
பவளமால் வரையை பனிபடர்ந்தனையதோர்
பவளமால் வரையை பனிபடர்ந்தனையதோர்
படரொளி தரு திருநீரும்
பவளமால் வரையை பனிபடர்ந்தனையதோர்
படரொளி தரு திருநீரும்
பவளமால் வரையை பனிபடர்ந்தனையதோர்
படரொளி தரு திருநீரும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றயும் நின்ற
பொற்குழல் திருச் சடையும் தானா...
சிவள மாளிகை சூழ் திருத்தில்லையில்
திருநடம் புரிகின்ற ஆ..
சிவள மாளிகை சூழ் திருத்தில்லையில்
திருநடம் புரிகின்ற ஆ..
தவளவண்ணனை நினைதோறும் என்மனம்
தழல் மெழுகாகின்றதே ஏ..